Friday, September 30, 2011

நான் ஒரு சிறு பிள்ளை....




அன்புக்கு அடையாளம் காட்டும்
என் இனிய பெற்றோரே!
என் செய்கை,
என் அடம்,
என் சேட்டை,
நான் தரும் கரைச்சல்கள்......
சில நேரங்களில்
சலிக்க உங்களைச் செய்யும்.
சில  வேளைகளில்
சினம் கொள்ள வைக்கும்.
என்றாலும்...
நான் ஒரு சிறு பிள்ளை....
உங்களின் பிள்ளை இல்லையே?
 
சின்னஞ்சிறிய இந்தக்
கால்களின் தடங்களும்,
கைகளின் பதிவுகளும்......
பின்னொரு நாளில்
எண்ணிப் பார்க்கையிலே
புன்சிரிப்பைச் சுமந்து தரும்!


காலக்  கண்ணாடியில்
கடக்கும் இந்தக் காலங்களை
மனக் கண்ணோரம் இனிதே
மீட்டிடும் போதினிலே....
இமையோரம் களிப்போடு
கசியும் கண்ணீரும்,
இதழோரம் இழையோடும்
இனிய புன்முறுவலும்;
போட்டிக்கு வாராவோ?


உங்கள் பாதுகாவலிலும், பரிவிலும்,
தங்கி வளரும் தவ்வல் நான்.
நான்,எனக்கு,எனது என்று மட்டுமே
நினைக்க எனக்கு வருகிறதே!
என்னைச்சுற்றியே எல்லாம்
என்றே எனக்கு தெரிகிறதே!
தன்னலமே முன்னணியில்
தலையாட்டும் பருவம்
இன்றையநாளில்  என்னதன்றோ?
என்னை வளரும்  வழிகாட்டி
முன்னேற்றிட வேண்டிய   
என் உலகத்தின் முதல் உறவே!
என் புரளி குழப்படிகளுக்குத்
தண்டனையாக உடல்வலியை
தயைசெய்து தந்திட வேண்டாமே!


 பிடிவாதத்துக்கு
அடி மருந்தாக அமைந்திடாதே!
அடி ஒரு கணக்கில்
பழக்கமான ஒரு
நட்பாகிடக் கூடும்.
சொன்ன சொல் மாறாமல்
தன்னிலை தளும்பாமல்
வகுத்திடும் எல்லைகள்
வளர்த்திடும் கொள்கைகள் என்னைத்
தடுமாற்றம் இன்றி
நடமாட வைக்கும்.


அரியண்டம் தாங்கேலாமல்
ஒருகணம் அடித்து;
அழுத கண்ணீர் கண்டு
மறுகணம் அன்பால் துடித்து;
இளகும் உங்கள் மனமும்,
தளரும் கொள்கை வேலிகளும்;
நான் செய்வதே சரி
என என்னை எண்ணிடப் பழக்கும்.


அடியும் திட்டும் என்னை
சரி பிழை பற்றி ஆராயும் அறிவற்ற,
அடிக்கு அடங்கும் அடிமையாக
வசைக்கும், வாய்ச்சாலத்துக்கும்
வசைந்து போகும் வீணனாக,
ஆக்கிடாதோ? அதுவோ உம் ஆசை?


பிள்ளையார் பிடிக்க
உள்ளத்தால் உள்ளுகின்றீர்!
குரங்காக அது
உரு மாறுவது சிலநேரம்.
பிள்ளைமனம் பற்றி
எள்ளளவும் எண்ணாமல்
பிள்ளைவளர்ப்பில் அடித்தல் என்பது
பின்னிப்பிணைந்தது என்றே
பிழையாக உன்னுகின்றீர்!




பிள்ளை என்றாலும்  இந்தப்
பிஞ்சு நெஞ்சுக்கும்
வெக்கமும், துக்கமும் உண்டன்றோ?
நொந்த உடலும்,வெந்த மனமும்;
சிந்தையில் கசப்பை பதிந்திடாதோ?
எந்த நாளிலும் எண்ணும் போதெல்லாம்
எரிச்சலைக் கொதியை கிளப்பிடாதோ?


பின்னொரு   காலத்தில்
பெற்றோருடன் எனக்கிசைந்த
சீவியம் இதனை நான்
சிந்திக்கும்  போதினிலே
ஆவியும் அகமும் மகிழ்வுற நான்
அசைந்திட வேண்டும்.
இன்பத்தின் நினைவில்
இசைத்திட வேண்டும்!
எந்தன் எண்ணங்களும்
உங்கள் ஆசைகளும் ஒன்றாக
இசைந்திட வேண்டும்!
இசைவீரோ?
என் பிறவிக்கு உறவான
என் இனியோரே!

நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்

104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்கு காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை நீங்கள் அவனை (தஜ்ஜாலை) சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகை கடமையாகுதல்!

103- நான் இறை இல்லம் கஃபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விளிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காரை எழும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம் ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பபட்டது. கோவேறுக் கழுதையை விட சிறியதும் கழுதையை விட பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன்.

முதல் வானத்தை நாங்கள் அடைந்தோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச்சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்து. ஆம் என்றார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவு ஆகுக என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாகங்கள் சென்றோம். யார் அது என்று வினவப்பட்டது. அவர் ஜிப்ரீல் என்று பதிலளிக்க உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கவர் முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆள்அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவர் ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம் யார் அது என்று கேட்கப்பட்டது, ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், சகோரரும் நபியுமான உங்களின் வரவு நல்வரவாகட்டும், என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது, முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன்,அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஜந்தாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை, என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை)அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது,ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது.முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. அவரது வருகை நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.அவர் இறைவா! என் சமுதாயத்தினரில் சுவர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சுவர்க்கம் புகுவார்கள்,என்று பதிலித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது.உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள், மகனும் நபியுமான உங்கள் வரவு நல்லவரவாகட்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறை இல்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர் இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள்.அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும் என்று சொன்னார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன.(ஸல்ஸபீல்,கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சுவர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

பிறகு என் மீது ஜம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்டார்கள். நான் என் மீது ஜம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகு முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஜந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்ன செய்தாய்? என்று கேட்க, அதை இறைவன் ஜந்தாக ஆக்கி விட்டான் என்றேன். அதற்கு அவர்கள் முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள்.அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) நான் என் (ஜந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஜம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



புகாரி 3239: இப்னு அப்பாஸ் (ரலி)

இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்

வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்..

53. நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது'' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று கூறினார்கள்.
புகாரி :4477 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)

பெரும் பாவங்கள் குறித்து..
54- (ஒரு முறை)பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் (மூன்றுமுறை)கேட்டார்கள். மக்கள்,ஆம் அல்லாஹ்வின்தூதரே!(அறிவியுங்கள்)என்று சொன்னார்கள். உடனேநபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்(தான் அவை)என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள். பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா, என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி-2654: அபூபக்ரா(ரலி)

55- நபி(ஸல்)அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக்கேட்கப்பட்டது. நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றொருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறினார்கள்.
புகாரி-2653: அனஸ்(ரலி)

56- அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களைத் தவிருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நுபி(ஸல்)அவர்கள்,அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது எனஅல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஒடுவதும்,அப்பாவிகளான இறைநம்பிக்கைக் கொண்ட,கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்(அந்தப் பெரும் பாவங்கள்)என்று பதில் கூறினார்கள்.
புகாரி-2766: அபூஹுரைரா(ரலி)

57-ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும், என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு
நபி(ஸல்)அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார், உடனே(பதிலுக்கு)அவர் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார்.(ஆக,தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.
புகாரி-5973: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)


இணைவைக்காது மரணித்தோர் சுவனில்..
58- யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார், என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார் என நான் கூறுகிறேன்.
புகாரி-1238: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி)

59- எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உடனே நான்,அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? எனக்கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-1237: அபூதர்(ரலி)

60- நபி(ஸல்)அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொணடபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹவைத் தவிர வேறெவரும் இல்லை)என்று சொல்லி பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகந்தே தீருவார், என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். நான் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்)" என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக)அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திரடினாலும் சரி(சொர்க்கம் புகுந்தே தீருவார்)அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!(அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)என்று கூறினார்கள்.

அபூதர்(ரலி)அவர்கள் இதை அறிவிக்கும் போது அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே, என்று கூறிவந்தார்கள்.
புகாரி-5827: அபூதர்(ரலி)

வணக்கத்திற்குறிய நாயன் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒரு நிராகரிப்பவன் வாயால் மொழிந்த பின் அவனைக் கொல்வது பற்றி..
61- பனூ ஸூஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களுடன் பத்ரில் கலந்து கொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல் கிந்தீ(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களிடம், இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்து விட்டான். பிறகு, அவன் என்னை விட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, அல்லாஹ்வுக்கும் கீழ்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின்தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்தூதர் நபி(ஸல்)அவர்கள்,(வேண்டாம்) அவனைக் கொல்லாதே என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி)அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்! என்றுகேட்க, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள்,அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த(குற்றமற்ற)நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த(குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய், என்று கூறினார்கள்.
புகாரி-4019: உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார்(ரஹ்)

62- எங்களை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம்.(அவர்களுடன் நடந்த சண்டையில்)அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவர் -லா இலாஹ இல்லல்லாஹ்- அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி)வந்தபோது நபி(ஸல்)அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், உஸாமாவே! அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவ வாக்கியத்தை)மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்? என்று கேட்டார்கள். நான் (நாங்கள் அவரைக் கொன்று விடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார் என்று சொன்னேன்.(ஆனால் என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்)அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே,(பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.
புகாரி-4269: உஸாமா பின் ஸைத்(ரலி)

காதலுக்கேதடா வயது


காதலுக்கேதடா வயது???


மூதாட்டி:
பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை
பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை
தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை
தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..!

முதியவர்:
வாடுவதும் ஏனோ என் கண்ணே...
தேடுவதும் எதையோ என் பெண்ணே...
உன் மணவாளன் நானிருக்கேன் மணியே..
உன் மகனை மறந்து வா தனியே..

மூதாட்டி:
பெற்ற மனம் என்றுமே பித்தத்தான்
பெற்ற வலி என்றுமே எனக்குத்தான்
விட்டுவர கூவுதிங்கே இதழ்தான்
விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் !

முதியவர்:
மணமுடித்த நாளே முடிவெடுத்தேன்
மரணம்வரை நான் உடனிருப்பேன்..
மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன்
மார்போடு உன்னையே அணைத்திருப்பேன்

மூதாட்டி:
நரைத்த முடியும் நடுங்கும் உடலும்
நடவா காலும் நகைப்பது தெரியலையோ?
கிழடு தட்டியும் கிண்டலா உமக்கு?
கிட்டுமோ காதல் இவ்வயதில் நமக்கு?

முதியவர்:
அட அறியாமைக்குப் பிறந்தவளே
அறிந்துகொள்ளடி அன்பான என்னவளே
இனித்தான் காதல் கிட்ட வேண்டுமா?
இருபதில் கிட்டியதை மறைக்கலாகுமா?

நாற்பதிலும் காதல் நாற்றாங்காலிடும்
ஐம்பதிலும் கூட அகக்களிப்பு கூடும்
அறுபதிலும் நேசம் அழகாய்ப் பூக்கும்
எழுபதிலும் கூட மெதுவாக தாக்கும்

வம்பை காதலில் நுழைக்காமல் மோது
அன்பை செலுத்து கொண்டவர் மீது
சாதலுக்கே வயதில்லை எனும்போது
காதலுக்கேதடா வயதென்று ஓது

மூதாட்டி:
அடுத்தடுத்து உரைக்கின்றீர்
எடுத்தெடுத்து தொடுக்கின்றீர்
மடுத்தது என் செவிதானா???
தொடுத்தது உம் கவிதானா?

அழகாக காதலின் தெளிவுரைத்தீரே
அன்பாக எந்தன் கரம் பிடித்தீரே
காதல் கடனை எமக்களித்தீரே
கடன்காரியாய் எமை அவதரித்தீரே!

முதியவர்:
காதலியே நீ எனக்கு என்றுரைப்பேன்
கடன்காரியாக்கவா கருத்துரைத்தேன்
கன்னம் நனைய நான் காத்திருப்பேன்
காதலை உணர்த்தும்வரை பார்த்திருப்பேன்

மூதாட்டி:
வந்தேன் வந்தேன் காதல் சித்திரமே
தந்தேன் தந்தேன் காதல் முத்திரையே
தித்திக்கும் காதல் சின்னம்கொண்டே
எத்திக்கும் படரட்டும் நேசச்செண்டே!

முதியவர்:
மீட்டுப் பார்த்தேன் பழங்கதையை
மீண்டும் வீழ்ந்தேன் உன் வலையில்
மீள முடியாமல் உன் பிடியில்
மாள வேண்டுமே உன் மடியில்!

"முதுமை இருந்தது முகத்தினிலே புதுமை பிறந்தது அகத்தினிலே..!!"

இறை நிராகரிப்பு உள்ளத்தில் தோற்றுவிக்கும் கேள்விகள்!

இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகின்றவர்களா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். "அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்." (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும். அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 17:49, 50, 51)

Thursday, September 22, 2011

விருத்தாசலம் ரயில்வே நேரம்

Dimensions Of A Series Paper Sizes

The dimensions of the A series paper sizes, as defined by ISO 216, are given in the table below in both millimetres and inches (cm measurements can be obtained by dividing mm value by 10). The A Series paper size chart to the right gives a visual explanation of how the sizes relate to each other - for example A5 is half of A4 size paper and A2 is half of A1 size paper.

Table of Paper Sizes From 4A0 to A10

A Series Paper Sizes Chart - A0, A1, A2, A3, A4, A5, A6, A7, A8
A Series Paper Sizes Chart.
SizeHeight x Width (mm)Height x Width (in)
4A02378 x 1682 mm93.6 x 66.2 in
2A01682 x 1189 mm66.2 x 46.8 in
A01189 x 841 mm46.8 x 33.1 in
A1841 x 594 mm33.1 x 23.4 in
A2594 x 420 mm23.4 x 16.5 in
A3420 x 297 mm16.5 x 11.7 in
A4297 x 210 mm11.7 x 8.3 in
A5210 x 148 mm8.3 x 5.8 in
A6148 x 105 mm5.8 x 4.1 in
A7105 x 74 mm4.1 x. 2.9 in
A874 x 52 mm2.9 x 2.0 in
A952 x 37 mm2.0 x 1.5 in
A1037 x 26 mm1.5 x 1.0 in
To obtain paper sizes in centimetres, convert mm values to cm by dividing by 10 and in feet by dividing inch values by 12.

4A0 & 2A0 - The DIN 476 Oversize Formats

4A0 & 2A0 aren't formerly defined by ISO 216 but are commonly used for oversized paper. The origin of these formats is in the German DIN 476 standard, that was the original base document from which ISO 216 was derived.

A Series Paper Size Tolerances

ISO 216 specifies tolerances for the production of A series paper sizes as follows:
  • ±1.5 mm (0.06 in) for dimensions up to 150 mm (5.9 in)
  • ±2 mm (0.08 in) for lengths in the range 150 to 600 mm (5.9 to 23.6 in)
  • ±3 mm (0.12 in) for any dimension above 600 mm (23.6 in)

A Series Paper Sizes Defined

The A series paper sizes are defined in ISO 216 by the following requirements:
  • The length divided by the width is 1.4142
  • The A0 size has an area of 1 square metre.
  • Each subsequent size A(n) is defined as A(n-1) cut in half parallel to its shorter sides.
  • The standard length and width of each size is rounded to the nearest millimetre.
Note: The last item is there because the root 2 aspect ratio doesn't always give a whole number.

750 ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் சிக்னல் : சாம் பிட்ரோடா தகவல்

வெளிநாடுகளைப் போலவே இந்திய ரயில்வே துறையிலும் எலக்ட்ரானிக் சிக்னல் முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும். நாட்டில் உள்ள 500 முதல் 750 ரயில் நிலையங்களை தனியாருடன் இணைந்து நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையை சீரமைத்து நவீனமயமாக்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட குழுவின் தலைவர் சாம் பிட்ரோடா நேற்று டில்லியில் கூறியதாவது: நாடு முழுவதும் 80 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதைகள் உள்ளன. வேறெங்கும் இது போன்ற அளவுக்கு ரயில் பாதைகள் இல்லை. ஆனாலும், மிகவும் மோசமான முறையில் சரியான பராமரிப்பு இல்லாமல் ரயில் பாதைகள் உள்ளன. ரயில்வே துறையின் பிற வசதிகளும் போதுமான அளவில் திருப்திகரமாக இல்லை. இவற்றை மேம்படுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது. ரயில்வே துறையில் புரட்சியை கொண்டு வரும் நோக்கத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுத்திட முடியும் என்பது குறித்து, எங்களது குழு முழுமையாக ஆராயும். அரசுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய பயனை அளித்திடும் வகையில் அமைந்த மிக முக்கியமான பரிந்துரைகளை, எங்கள் குழு வழங்கும். இந்திய ரயில்வே துறையைப் பொறுத்தவரை சிக்னல்கள் தான் பெரிய பிரச்னை. அதிலும் எலக்ட்ரானிக் சிக்னல் வசதிகள் இந்தியாவில் மிகவும் குறைவு. பத்து சதவீத அளவுக்கே எலக்ட்ரானிக் சிக்னல் வசதிகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில், 60 முதல் 70 சதவீதம் வரை எலக்ட்ரானிக் சிக்னல் வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வே துறை முழுவதும் எலக்ட்ரானிக் வசதியை கொண்டு வர வேண்டும். தண்டவாளங்களின் உறுதி மற்றும் பராமரிப்பு ஆகியவையும் நவீனப்படுத்தப்பட வேண்டும். இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்பங்களை இந்தியாவில் புகுத்த வேண்டும். தவிர, இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்ப உத்திகளை தயாரிக்க வேண்டும். ரயில் பெட்டிகளின் உறுதி, அதில் பயணிகளுக்கு என உருவாக்கப்படும் வசதிகள் என எல்லாமே தற்போது திருப்திகரமாக இல்லை. நாடு முழுவதும் 7,000 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 500 முதல் 750 ரயில் நிலையங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். இந்நிலையங்களை தனியாருடன் இணைந்து அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாம் பிட்ரோடா கூறினார்.

ரயில்வே துறையை நவீனப்படுத்த பிட்ரோடா தலைமையில் குழு - மத்திய அரசு : ரயில்வே துறையை மேம்படுத்தும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக முக்கிய திட்டங்களில் தனியாருடன் கைகோர்த்து, பல ரயில் திட்டங்களை நிறைவேற்றிடவும், அதன் மூலம் வரும் வருமானத்தைப் பெருக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட தலைசிறந்த வல்லுனர்கள் குழுவை, தகவல் தொழில்நுட்பத் தலைவராக பிட்ரோடா இருந்து வழி நடத்துவார். இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியையும், புரட்சிகரமான மாறுதல்களையும் கொண்டு வந்தவர் சாம் பிட்ரோடா. இவரை தற்போது ரயில்வே துறைக்கும் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்து, அவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதை நேற்று டில்லியில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது குறித்து திரிவேதி மேலும் கூறியதாவது: பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டம் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு, நாட்டில் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்துவது என்பது குறித்தும், எத்தகைய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசும், திட்டக் கமிஷனும் விரிவாக ஆராய்ந்து வருகின்றன. இதற்காக பல்வேறு இலக்குகளை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் செயலாற்றப்படும் . அந்த வகையில் ஒட்டு மொத்த வளர்ச்சி என்பது அவ்வளவு தூரம் இருக்க வேண்டுமெனில், ரயில்வே துறையில் 11 சதவீத வளர்ச்சி இருந்தாக வேண்டும். ரயில்வே துறையை தள்ளி வைத்துவிட்டு, ஒட்டு மொத்த வளர்ச்சியை எட்டிவிட முடியாது. இதற்கு ரயில்வே துறையை சீரமைப்பதும், புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பேராசிரியர்கள், பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் அங்கம் வகிப்பர்.

அதிநவீன வசதிகளை கொண்டு வருவதும், வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்ற வியத்தகு அம்சங்களையும் இந்திய ரயில்வே துறையில் கொண்டு வருவது குறித்தும் இந்த குழு ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். தனது இடைக்கால அறிக்கையை இந்த ஆண்டு இறுதியில் ரயில்வே அமைச்சகத்திடம் இந்த குழு அளிக்கும். ரயில்வே துறையைப் பொறுத்தவரை நிதி தான் பெரிய பிரச்னை. திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருப்பது நிதிப் பற்றாக்குறையால் தான். பல முக்கிய திட்டங்கள் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. இதை கருத்திற்கொண்டு, தனியாருடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில், ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் பிரச்னை உள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் வெறும் ஏழு கி.மீ., தூரத்திற்கே ரயில் பாதை உள்ளது. சிக்கிமில் ரயில் பாதை இல்லை. அங்கு ரயில் பாதை இணைப்பு இருந்திருந்தால், சமீபத்திய பூகம்பத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் சென்றடைந்திருக்க முடியும்; நிவாரணப் பொருட்களையும் எளிதில் மக்களுக்கு கொண்டு சென்றிருக்க முடியும்.
எனவே, ஒரு சில திட்டங்களுக்கு வருவாயை மட்டுமே குறிக்கோளாக பார்க்காமல், அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பது குறித்து, திட்டக் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் திரிவேதி கூறினார்.

ரயில்வே துறையை சீரமைப்பதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்களின் விவரம்: எச்.டி.எப்.சி., வங்கியின் தலைவர் தீபக் பரேக், ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியாவின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.வர்மா, ஆமதாபாத் இந்திய மேலாண்மை ஆய்வு மையத்தின் பேராசிரியர் ரகுராம், ஐ.எப்.டி.சி.,யின் மேலாண்மை இயக்குனர் ராஜிவ் லால், பீட்பேக் இன்பராஸ்டரக்சர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் வினாயக் சட்டர்ஜி ஆகியோர்.

Monday, September 19, 2011

ஈமானின் அநேக கிளைகள்


21- ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-9: அபூஹூரைரா(ரலி)

22- அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்)அவர்கள் சென்றார்கள். உடனே,அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-24: அப்துல்லாஹ் (இப்னு உமர்(ரலி)

ஈமானின் முதல் அங்கம்

ஈமானின் முதல் அங்கம் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவது.
16- அபூதாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபி (ஸல்)அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் பின் ஹிஷாம்,அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக சாட்சிக் கூறுவேன்,என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீர் புறக்கணிக்கப்போகின்றீரா? எனக்கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்)அவர்கள் ஒரு புறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே(மரணிக்கின்றேன்)என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்து விட்டார். அப்போது நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும் வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன், என்று கூறியதும்,இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று,(அல்குர்ஆன்-9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(புகாரி:1360 அல் முஸய்யப் பின் ஹஸ்ன்(ரழி)

Saturday, September 17, 2011

சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்

7- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள்! என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்! என்று (மக்களை நோக்கிச்) கூறி விட்டு, (அந்த மனிதரை நோக்கி) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்க வேண்டும்! தொழுகையை நிலை நாட்டவேண்டும்! ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்! உறவைப் பேணிக் கொள்ளவேண்டும்! என்று கூறி விட்டு, உமது வாகனத்தில் புறப்படுவீராக! என்றார்கள்.
அம்மனிதர் (அப்போது)தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்!

(அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி), நூல்கள்: புகாரி 5983, முஸ்லிம் 14-15)


8. கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்கவேண்டும். விதிக்கப்பட்ட தொழுகைகளையும் நிர்ணயிக்கப்பட்ட ஜகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்! ரமலானில் நோன்பு நோற்க வேண்டும்! என்றார்கள். அதற்கவர், என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட எதையும் அதிகமாகச் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி), நூல்கள்: புகாரி- 1397, முஸ்லிம் 16)

தொழுகை

இஸ்லாத்தின் ஜந்து கடமைகளில் ஒன்றான தொழுகைகள்

6- நஜ்த் தேசத்தைச் சார்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய தலை பரட்டையாக இருந்தது. குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஜவேளைத் தொழுவது என்றார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான தொழுகைகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தொழுகைகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் இஸ்லாத்தின் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -நோன்புகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்தைப் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான ஜகாத்) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தர்மங்கள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்றார்கள்.

(அறிவிப்பவர் : தல்ஹா (ரலி), நூல்கள் : புகாரீ 46, முஸ்லிம் 12)

ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?

5- நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34)வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

வெளிச்ச வாசல்



அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இலங்கும் உலகம் பற்பலவாம்
வல்லான் அவனே படைப்பவனாம்
வாழச் செய்திடும் ரட்சகனாம்

அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாளைய தீர்ப்பின் அதிபதியாம்!

அதிபதி உனையே வணங்குகிறோம்
அடிமைகள்,உதவியும் தேடுகிறோம்
எதுநேர் வழியோ அதில் செலுத்து...
இன்னருள் பெற்றோர் வழியதுவே!

நீசினந் தோரின் வழிவேண்டாம்
நெறிகெட் டோரின் வழிவேண்டாம்
மாசில் லாஉன் அருள்பொழியும்
மார்க்கப் படியே எமைநடத்து

வேதம் எதிலும் இல்லாத
வெளிச்ச வாசல் ஃபாத்திஹா
போதம் குர்-ஆன் சாரமிது!
புரிந்தோர் உணரும் ஞானமிது!!

ஆமீன்,ஆமீன் அவ்வாறே
ஆகுக,ஆகுக,ஆகுகவே

Friday, September 16, 2011

my company Album

 












My Photos


பனூ இஸ்ராயீல்கள் மூவரின் கதை.

1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான் (என்றோ) அல்லது மாடு தான். (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப்போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும்(ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய் விட்டது) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீதுகோபமுற்றான்'' என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வாகிய படைத்தவனை பொய்ப்பித்து, அவன் படைத்தவற்றிலிருந்து சுகம் அனுபவிக்கும் நன்றி கெட்ட மனிதன்!

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (அல்குர்ஆன்: 77: 25-28

Friday, September 9, 2011

தினமும் ஒரு குரான் வசனம்

துதித்தல் அல்லாஹ் ஒருவனையே!

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன, (அல்லாஹ்வாகிய அவன்தான்) மெய்யான பேரரசன்! பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 62:1)

தற்பொழுது தாம்பரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம்


Indian passports will have helpline numbers -Gulf News


Abu Dhabi: A helpline number to support Indians in distress will be stamped on the passports of Indians coming to the UAE in the near future, India’s ambassador to the UAE told Gulf News on Wednesday.
It will be one of many ways of publicising the 24-hour helpline number (800 46342 ) of the Indian Workers Resource Centre (IWRC) set up in Dubai by the Indian Embassy to help Indians in distress, M.K Lokesh, said.
Stamping the toll-free number on passports during the emigration process at Indian airports will take time but the embassy will initiate campaigns in cooperation with major shopping malls, retail chains and community organisations to publicise the services of the centre, Lokesh said.
The measures comes after a three-member family was found dead in Ras Al Khaimah last week, apparently driven to desperation by financial difficulties. As Gulf News reported earlier, the decomposed bodies of Anil Kumar Nair, 44, his wife Sreeja, 31, and daughter Anusree, 8, were found at their residence. Police sources said that forensic investigations had revealed that the man and his wife allegedly hanged their daughter and then committed suicide by hanging themselves due to financial problems. The bodies were repatriated on Wednesday night on Indian flights from Sharjah to Kochi, in the southern state of Kerala, said B. Gopakumar, general-secretary of the Ras Al Khaimah Indian Association.
The family had not approached anybody for assistance of any sort, including the IWRC. The IWRC provides counselling mainly in four areas: medical, legal, consular and social [issues].
Article continues below
After news of the tragedy became public, the centre received many calls from Indians facing financial difficulties, Lokesh said. “It seems mostly it is [a] problem of white-collar workers who have easy access to bank loans and credit cards,” Lokesh said.
He said that, during the first five days of the current month, the centre had received 212 calls [on average about 40 calls a day], where previously it only received around 30 calls a day. Most of the calls pertained to financial problems and counsellors helped callers deal with their issues.
He said many people only sought help when their problems were rather severe. “When people end up in huge debts, it will be difficult to help them. They should seek help as soon as they feel that they are in trouble,” Lokesh urged.
The centre had received 15,000 calls since its inception in November last year, he said. Helpline agents can deal with calls in all Indian languages. In addition to the toll-free number, the resource centre has a walk-in counter in Dubai and Abu Dhabi to receive petitions directly from Indian workers.
The centre has also conducted several financial literacy camps at labour accommodations and other venues. “Such awareness campaigns will be intensified,” the ambassador said.
How to contact the Indian Workers Resource Centre
Helpline number: 800 46342, or 800 (India) for quick recall
Fax: 043559309
SMS: 0557694747
Email Address: help@iwrc-uae.com
To visit directly :-
Dubai: IWRC Centre, Al Jawahara, 202, Above Habib Bank AG Zurich, Bank Street, Bur Dubai (open on all days of the week from 3 pm to 7 pm)
Abu Dhabi: Indian Social And Cultural Centre in Mina (open only on Fridays from 3 pm to 7 pm)