Thursday, September 25, 2014

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு

இறைத்தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.
இந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக் கற்றுக் கொடுப்பதற்கும் இந்தத் தொடரை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடரைப் படிக்கும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்த திருப்தி ஓரளவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இத் தொடரை உங்கள் குழந்தைகளை படிக்கச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் படித்து நபிகளாரின் வரலாறை சொல்லிக் கொடுங்கள்.

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது?
பதில்: திங்கள் கிழமை (ஆதாரம்: முஸ்லிம் 1977)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் பிறந்தார்கள்?
பதில்: கி.பி. 570 என்று சிலரும் கி.பி 571 ஏப்ரல் 21 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். அரபி மாதப்படி ரபீவுல் அவ்வல் 12 என்று சிலரும் ரபீவுல் அவ்வல் 9 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். (நபி (ஸல்) அவர்கள் பிறப்பு தொடர்பாக வலிமையான ஆதாரங்களுடன் உள்ள எந்தச் செய்தியையும் நாம் அறியவில்லை. வரலாற்று நூல்களில் பிரபலமாக எழுதப்பட்டுள்ளதை இங்கே குறிப்பிட்டுள்ளோம்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில்: அப்துல்லாஹ் (ஆதாரம்: புகாரீ 2700 )

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
பதில்: ஆமினா (ஆதாரம்: முஸ்லிம் 3318)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?
பதில்: அப்துல் முத்தலிப் (ஆதாரம்: புகாரீ 2864)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆண்கள் எத்தனை பேர்?
பதில்: 1. ஹாரிஸ் 2. ஸுபைர் 3.அபூதாலிப் 4.அப்துல்லாஹ் 5. ஹம்ஸா (ரலி) 6. அபூலஹப் 7.கைதாக் 8. முகவ்விம் 9. ஸிஃபார் 10. அப்பாஸ் (ரலி) ஆகிய பத்து நபர்களாகும். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
பதில்: ஹம்ஸா (ரலி), அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: அல்இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?
பதில்: 1. ஸஃபிய்யா (ரலி), 2. ஆத்திகா, 3. அர்வா, 4. உமைய்யா, 5. பர்ரா, 6. உம்மு ஹகீம் ஆகிய ஆறு நபர்கள். (ஆதாரம்: மஸாயிலு இமாம் அஹ்மத்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?
பதில்: ஸஃபிய்யா (ரலி), மற்றவர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?
பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்த போது இறந்தார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?
பதில்: அப்துல் முத்தலிப். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் 
(ஆதாரம்: அஸ்ஸீரத்துன் நபவிய்யா லி இமாம் தஹபீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார்?
பதில்: உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம்: புகாரீ 3737)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார்? யார்?
பதில்: 1. ஸுவைபா (ஆதாரம்: புகாரீ 5101), 2. ஹலீமா அஸ்ஸஃதிய்யா (ஆதாரம்: இப்னு ஹிப்பான் 6335)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
பதில்: ஆடு மேய்த்தல் (ஆதாரம்: புகாரீ 3406)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு முன்னர் குறைஷிகள் கஅபத்துல்லாஹ்வை புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்களின் வயது என்ன?
பதில்: 35 (ஆதாரம்: தப்ரானீ பாகம்: 18, பக்கம்: 342)

கேள்வி: கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியை செய்தார்கள்?
பதில்: கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள். (ஆதாரம்: புகாரீ 1582)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?
பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3816)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?
பதில்: நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
பதில்: 25 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் உலகத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
பதில்: 65 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்த போது அவர்கள் கன்னிப் பெண்ணா? விதவையா?
பதில்: இரண்டு திருமணங்கள் முடித்த பின்னர் விதவையாக இருந்தார்கள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?
பதில்: 1. அபூ ஹாலா பின் ஸுராரா, 2. அதீக் பின் ஆயித் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்டப் பெயர் என்ன?
பதில்: தாஹிரா – பரிசுத்தமானவள் (ஆதாரம்: தாரிக் திமிக்ஸ், பக்கம் 109)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?
பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3818)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?
பதில்: அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3818, 1303, தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 132)

கேள்வி: மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன?
பதில்: இப்ராஹீம் (ஆதாரம்: புகாரீ 1303)

கேள்வி: நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?
பதில்: 16 மாதம் (ஆதாரம்: அபூதாவூத் 2772)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?
பதில்: சூரிய கிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்: புகாரீ 1043)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
பதில்: ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி) (ஆதாரம் புகாரீ 516, 5842, 357 அஹ்மத் 525)

கேள்வி: ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில்: அபுல் ஆஸ் பின் ரபீவு (ஆதாரம்: திர்மிதீ 1062)

கேள்வி: ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?
பதில்: அலீ (ரலி) (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு?
பதில்: நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள் (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?
பதில்: பாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து இறந்தார்கள் (ஆதாரம்: புகாரீ 3093)



இதை பதிவிட்ட சகோதர்க்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக


என்றும் சேவையில்


A.SETTU


Saturday, March 3, 2012

கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே

கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்! கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்!

துருக்கி நாட்டில் 2000 ஆம் ஆண்டு பழம் பெரும் அரிய பொக்கிசங்களைத் தேடி கண்டு பிடித்து அவைகளை பொருக்காட்சியத்தில் வைப்பதிற்காக அலையும் போது, தொல்பொருள் ஆராச்சியாளர்களே அறியா ஒரு அரும்பெரும் பொக்கிஷம் கிடைத்தது. அது என்ன தெரியுமா?
ஈசா நபி காலத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஹீப்ரு, அராபிக், மற்றும் பழமைவாய்ந்த போனிசியன்-அக்காடியன் மொழியின் கலப்பினமான 'அரமைக்' மொழியில் மிருக தோலினால் தங்க எழுத்துக்களில் கையினால் எழுப்பட்ட நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அதனுடைய அருமை 2012 ஆண்டு ஆரம்ப முதலில் யாருக்கும் தெரியாது.
அந்த நூலினை சமீபத்தில் தலை நகர் அங்காராவின் பழமை பொருள் பாதுகாக்கும் அருங்காட்ச்யகத்திற்கு பலத்த பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்ததினை தற்போதைய ‘போப் பெனெடிக்ட்’ அவர்கள் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள் என்றதும் அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
அதில் தான் வானவர்களும் போற்றக்கூடிய வள்ளல் பெருமான் முகமது ஸல்லல்லாகு அவர்கள் அகிலத்தில் உதிக்கப் போகிறார்கள் என்ற முன்னறிப்பாகும். அந்த அறிவிப்பின் நகல் மட்டும் ரூ 10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈமான் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் அது விலை மதிக்க முடியா பொக்கிஷம் என்றால் மிகையாகுமா?.

புனித குர்ஆனில் மாந்தரை நல்வழிப் படுத்த அகிலத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான நபி மார்கள் வல்ல அல்லா அனுப்பியதாகவும் அதில் 25 பெயர்கள் சொல்லப் பட்டதும் அனைவரும் அறிவர். அப்படி நபிகளாக வந்த மூசா அலைகிவஸல்லம் மற்றும் ஈசா அலைகிவஸல்லம் ஆகியோரை இன்று கடவுளாக யூதர்களும், கிறித்துவர்களும் சித்தரிகிறார்கள். மூசா(ஸல்) அவர்களுக்கு தௌராத் வேதத்தினையும், ஈசா நபி அவர்களுக்கு இஞ்சில் வேதத்தினையும் ஏக வல்லோன் அல்லா வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது அல் குரானிலே! அதனை அனைத்து முஸ்லிம்களும் நம்புகிறோம்.
அதற்கு உதாரணமாக குரானில் அல் அஹ்ராப்- சிகரம் என்ற தலைப்பில் அத்தியாயம் எழில், பாகம் ஒன்பதில்,

'அன்றி, (இறைவனே) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையைக் கற்பனை செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும்(செய்வாயாக). நிச்சயமாக நாங்கள் உன்பாலே முன்னோக்கினோம்".......எவர்கள் நம்முடைய வசனங்களை(மெய்யாகவே) விசுவசிக்கிரார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளாகிய) அதனை நான் கற்பனை செய்வேன்" என்றும், (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுத்தாற்றல் அற்ற(நம்) தூதராகிய இந்த நபியை (ஸல்) பின்பற்றுகிறார்களோ அவர்கள், தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இஞ்சிளிலும், இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதினைக் காண்பீர்கள். (இத்தூதரோ ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாபமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்!
அத்தியாயம் 61 பாகம் 28 அணிவகுப்பு என்று வருகின்ற இடத்தில், 'மர்யமுடைய மகன் ஈசா(ஸல்), "இஸ்ரயீளின்
சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப் பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு
முன்னுள்ள தவ்ராத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் 'அஹ்மத்' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் நன்மாராயங் கூருகிர்ன்றே" என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறுதி நபி முகமது (ஸல்) அவர்கள் உதித்ததினையோ, அவர்கள் சந்ததியினர் நமது சகோதரர்கள் என்பதினையோ ஏன் யூதர்களோ அல்லது கிருத்துவர்களோ ஒத்துக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற ஆசிய நாடுகளையும், ஓட, ஓட விரட்டி, குனிய, குனிய குத்துகிறார்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் வசிப்பவர்களில் யார் பெயரினை தங்கள் பெயருடன் சேர்த்துள்ளார்கள் ஜீசுஸ் கிரிஷ்ட்டா அல்லது முகம்மதா என்று ஆராயும் போது முகமது பெயரே அதிகம் என்று அறிந்தார்கள்.
கிருத்துவர்கள் வாழும் நகரில் முகமது பெயர் முக்கியத்துவம் வாய்ந்து, மக்களை தன் பெயர் தாங்கச் சொல்லும் அளவிற்கு செய்த ஈர்ப்பு என்ன என்று கீழே காணலாம்:
1) வரலாற்றில் வாழ்ந்து, ஏக அல்லாவால் அடையாளம் காணப் பட்டு, மாக்களாக இருக்கும் மக்கள் ஓரிறையின்பால் ஈர்க்கப்படவும், பணபடவும் வஹி மூலம் நபியாக மக்களுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டு பெருமைப் படுத்தப் பட்டவர்கள்.
ஆனால் மூஸா(ஸல்) மற்றும் ஈசா(ஸல்) ஆகியோர் நபியாக அனுப்பப் பட்டு அறியாத மக்களால் கடவுளாக சித்தரிக்கப் பட்டவர்கள் ஆவர்.
2) எல்லாப் புகழும் அல்லாவிற்கே என்று ஏக இறைவனைப் புகழ்ந்தவர்கள். தன்னுடைய தனிப்பட்ட புகழ் என்றும் தலை தூக்கக் கூடாது என்று கவனமாக செயல் பட்டவர்கள்.
ஆனால் யூதர்களும், கிருத்துவர்களும் மூசாவினையும் , ஜீசசினையும் கடவுளாக வழிபட வழி வகுத்தனர்.
3) ரசூலல்லா மார்க்க விளக்கங்களைத் தந்ததோடு திருமண வாழ்க்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தார்கள்.
ஆனால் மற்ற மதங்களில் குருமார்கள் திருமண மாகாது இருந்ததால் பிற்காலத்தில் சிறுவர்களுடன் கூடா உறவு மேற்கொள்ள வழி வகுத்து விட்டார்கள் .
4) ரசூலல்லா தனிநபர் ஒழுக்கத்தினை வலியுறித்தினார்கள்.
ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இஸ்ரேயில் ஜனாதிபதி தன் பணிப் பெண்ணுடன் அலுவலகத்தில் கள்ள உறவு கொண்டதும், அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் தன் பணிபெண்ணுடன் வாய்வழி உறவு கொண்டதும் உலக நாடுகள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தது.

5) ரசூலல்லாஹ் ஜனநாயக முறை ஆட்சி நடத்தியதால் தனக்குப் பிறகு வாரிசினை நியமிக்க வில்லை.
ஆனால் இன்னும் கூட சில கிருத்துவ நாடுகளில் முடியரசு இருந்து கொண்டுதான் உள்ளது.
6) ரசூலல்லா அரசியல் தலைவராக இருந்தபோது எளிமையினைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் இஸ்ராயில், கிருத்துவ மன்னர்கள் ஆடம்பர வாழ்கை நடத்தியும், கொடுங்கோல் ஆட்சி நடத்தியதாலும் அந்த நாடுகளில் தற்போது இஸ்லாமியர் நாடுகளில் நடந்ததுபோன்ற பிரான்ஸ் புரட்சி, ரஷ்யன் புரட்சிகள் ஏற்பட்டன.
7) ரசூலல்லா அரசியல் தலைவராக இருந்தபோது யூதர்கள், கிருத்துவர்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அமைதி ஆட்சியினை தந்தார்கள்.
ஆனால் இஸ்ரயிலர்களும், கிருத்துவர்களும் ஆளும் நாடுகளில் இன்றும் இஸ்லாமியர் வேட்டையாடப் படுகின்றனர்.
8) ரசூலல்லாஹ் தன் படையினருக்கு போர்களங்களில் பயிர்கள், மரங்கள், கட்டிடங்கள் பாதுகாக்கவும், வளர்ப்பு பிராணிகள்,பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு உடல் சேதம் கொடுக்ககூடாது என்ற கட்டளைப் பிறப்பித்தார்கள்.
ஆனால் 1090 ஆம் ஆண்டு ஜெருசலத்தினைப் பிடிக்க நடந்த சிலுவைப் போரில் கிருத்துவர்கள், முஸ்லிம் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆக மொத்தம் 60000 பேர்கள் கொன்று குவித்தனர்.
9) பெண் சிசு கொலை தடுத்தும், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கியும், திருமணம் ஒரு ஒப்பந்தம், அது ஒரு சடங்கு இல்லை என்றும், சீதன முறை ஒழித்தும், திருமண வைபவங்களில் ஆடம்பரம் ஒழித்தும் ஆணை இட்டார்கள்.
ஆனால் கிருத்துவ அமெரிக்காவில் சமீபத்தில் தான் முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த ஜனாதிபதி ஒபாமா பெண் ஊழியருக்கு வேளையில் சம உரிமை வழங்கினார்.
10) ரசூலல்லாஹ் அடிமையினை விடுதலை செய்தார்.
ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பே தென் ஆப்பிரிகா போன்ற நாடுகளில் கறுப்பின மக்களுக்கும் சம உரிமை கிடைத்தது.
11) ரசூலல்லாஹ் மது, விபச்சாரம், வட்டி போன்றவைகளை அறவே ஒழித்தார்கள்.
ஆனால் கிருத்துவ, இஸ்ரேயில் நாடுகளில் அவைகளை இன்று வரை ஒழிக்க முடியவில்லை.
12) ரசூலல்லாஹ் உணவு முறையில் ஹலால்,ஹராம் எது என்று பிரித்துக் காட்டினார்கள்.
ஆகவேதான் புழுப் பூச்சிகளை சாப்பிட்டு வந்த சீன, ஆப்பரிக்க முஸ்லிம்கள் ஹலால் உணவுப் புரட்சியினை கடைப் பிடித்தார்கள்.
ஏக இறைவன் ரசூலல்லாஹ் மூலம் வித்திட்ட இஸ்லாமிய மார்க்கம் இன்று 150 கோடி மக்களை கொண்டுள்ளது ஆச்சரியமே! அது எல்லாம் வல்ல நாயனின் கட்டளை. ரசூலல்லாவின் படைப்பிற்கும், புகழுக்கும் துருக்கியில் படைத்த சான்று ஒன்று தான் உள்ளது என்று எண்ண வேண்டாம். இன்னும் மனிதனுக்கு கிடைக்காத பொக்கிஷம் புதைந்துள்ளது. அவைகளை சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்கள் வெளிக் கொண்டு வருவதின் மூலம் நபி (ஸல்) புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்போமா?

Saturday, January 21, 2012

இசுலாத்தின் பிரிவினங்கள்

  • அகுமதிய்யா முசுலிம் சமூகம்

  • சியா இசுலாம்
  • சுன்னி இஸ்லாம்

  • தாவூதி போரா





  • அகுமதிய்யா முசுலிம் சமூகம்










  • அகுமதிய்யா முசுலிம் சமூகம் அல்லது அஃகுமதிய்யா முசிலிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா (Ahmadiyya Muslim Community, Jama'at Ahmadiyya, அரபு மொழி: الجماعة الأحمدية المسلمة, al-Jamā'a al-Ahmadīya al-Muslima, உருது: احمدیہ جماعت) என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட காதியானிகள் இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் அகுமதிய்யா இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்).[1]
    இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சுன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது[மேற்கோள் தேவை]. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

    [தொகு] மேற்கோள்கள்

    [தொகு] வெளி இணைப்புகள்





    சியா இசுலாம்




    அடிப்படை நம்பிக்கைகள்
    அல்லா ரசூல் (சல்)
    மலக்குகள் இறைதூதர்கள்
    இறை வேதங்கள்
    மறுமை கலாகத்ர்
    கட்டாயக் கடமைகள்
    இறை நம்பிக்கை தொழுகை
    நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு
    இசுலாமிய வரலாறு
    இஸ்லாமிய வரலாறு சஹாபா
    ரசூத்தீன் கலிபாக்கள்
    ஷியா இமாம்கள்
    நூல்களும் சட்டங்களும்
    குர்ஆன் ஹதீஸ்
    இஸ்லாமிய பிரிவுகள்
    சன்னி சியா
    பண்பாடு
    கலை நாள்காட்டி குழந்தைகள்
    மக்கள் பரவல் பண்டிகைகள்
    மசூதிகள் மெய்யியல்
    அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்
     பா    தொ 


    ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் அரபு மொழி சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகனான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.
    இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். எஞ்சிய பத்து சதவீதத்தினரான ஷியா முஸ்லிம்கள். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான். சுன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.


    பொருளடக்கம்



    [தொகு] வேறுபாடு

    அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சுன்னிகளுக்கும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.
    முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
    தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.
    தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.

    [தொகு] ஜகாத்

    தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

    [தொகு] முஹர்ரம்

    சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொஹரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள்.


    [தொகு] இந்தியாவில்

    இந்தியாவில் ஷியாக்கள் எண்ணிக்கை குறைவு. உத்தரப் பிரதேசம், காஷ்மீரில், ஆந்திரம், தமிழகத்தில் எனப் பிரிந்துள்ளனர்..
    தமிழகத்தில் ஷியாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு மசூதிதான் இதன் தலைமையகம். தமிழக அரசின் தலைமை ஷியா காஜி ஜி.ஏ. அஸ்கரியின் அலுவலகம் இங்குதான் உள்ளது.
    சென்னையில் 10 மசூதிகள், வேலூர் தொரப்பாடி, கிருஷ்ணகிரி, ஜெகதேவி, வந்தவாசி என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி உருது. தமிழ் குறைவானவர்களுக்கே தெரிந்துள்ளது.

    [தொகு] மேற்கோள்கள்

     

    சுன்னி இஸ்லாம்

     

    <><><><><><>

    <><><><><><><><>
    உள்ளடக்கங்கள் சுருக்கமாக
    அடிப்படை நம்பிக்கைகள்
    அல்லா ரசூல் (சல்)
    மலக்குகள் இறைதூதர்கள்
    இறை வேதங்கள்
    மறுமை கலாகத்ர்
    கட்டாயக் கடமைகள்
    இறை நம்பிக்கை தொழுகை
    நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு
    இசுலாமிய வரலாறு
    இஸ்லாமிய வரலாறு சஹாபா
    ரசூத்தீன் கலிபாக்கள்
    ஷியா இமாம்கள்
    நூல்களும் சட்டங்களும்
    குர்ஆன் ஹதீஸ்
    இஸ்லாமிய பிரிவுகள்
    சன்னி சியா
    பண்பாடு
    கலை நாள்காட்டி குழந்தைகள்
    மக்கள் பரவல் பண்டிகைகள்
    மசூதிகள் மெய்யியல்
    அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்
     பா •  • தொ 

    சுன்னி இஸ்லாம் (Sunni Islam) என்பது இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.

    பொருளடக்கம்

    [தொகு] வரலாறு

    இஸ்லாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி (ஸல்) அவர்கள், அதன் பொருட்டு இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராக கொண்டு ஒரு இஸ்லாமிய பேரரசை நிறுவினார்கள். அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானார்கள். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்கு பிறகு உமர் (ரலி) என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.


    கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு     முகம்மது நபியின் கீழ் பேரரசு, 622-632      ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661      உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750

    634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் (ரலி) அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு அலீ (ரலி) என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலி (ரலி) அவர்களை விட மூத்தவரான உதுமான் (ரலி) என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலி (ரலி) அவர்களின் சம்மதத்தோடு உதுமான் (ரலி) அவர்கள் மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உஸ்மான் (ரலி) அவர்களின் மறைவுக்கு பிறகு அலி (ரலி) அவர்கள் நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலி (ரலி) அவர்களை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.

    [தொகு] நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்.


    உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் (ரலி) காலத்தது

    சுன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லாஹ் கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி. அலி (ரலி) அவர்கள் ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.

    [தொகு] சட்ட தொகுப்புகள்.

    இச்சட்ட தொகுப்புகளை இயற்றியவர்கள் எட்டாம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட சமகாலத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களாகும். இவர்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்லாம் பரவலாக வியாப்பித்திருந்ததாலும், நேரடியாக சமய சட்டங்களைப் பெறுவதில் அக்காலத்தைய தூர பிரதேச மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாலும் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்த மார்க்கம் கற்றறிந்த அறிஞர்கள் திருக்குர்ஆன் மற்றும் முகம்மது நபி (சல்) அவர்களின் வழிகாட்டல்களிலிருந்தும் சட்டங்களை தொகுத்து வழங்கும் தன்னலம் கருதாத சேவைகளை செய்தனர். இவ்வாறான சட்ட தொகுப்பாளர்கள் நால்வர் இன்றும் அனைத்து முஸ்லிம்களாலும் மதிக்க கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய சட்டத்தொகுப்புகளாவன; ஹனபி, ஷாபி, மாலிக்கி மற்றும் ஹம்பலி என்பனவைகளாகும். இச்சட்டத் தொகுப்புகள் அரபியில் மத்ஃகப்(المذاهب) என அழைக்கப்டுகின்றன.

    ஹனபி மத்ஹப்
    இச்சட்டத்தொகுப்பு 702-ல் இராக்கில் பிறந்த "இமாம் அபூ ஹனிபா" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

    "எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை."[1]. அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் (குர்ஆனுக்கும்) நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லை விட்டு விடுங்கள்! [2]

    இந்த மத்ஹப் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், துருக்கி, இராக், ரஷ்யா, மத்திய ஆசிய மற்றும் பால்கன் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.

    ஷாபி மத்ஹப்
    இச்சட்டத்தொகுப்பு "முகம்மது இப்னு இத்ரிஸ் அஸ்-ஷாபி" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

    எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், ரஸூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.[3]. ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ, அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை” என்று முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுள்ளனர்.[4].

    இது இந்தோணேசியா, கீழை எகிப்து, மலேசியா, சிங்கப்பூர், சோமாலியா, ஜோர்டன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாட்டில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது. மேலும் இந்த மத்ஹப் திருமறையில் உள்ள ஷரியத் முறையை மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கிறது.


    மாலிக்கி மத்ஹப்
    இச்சட்டத்தொகுப்பு "மாலிக் இப்னு அனஸ்" என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் முகம்மது நபி (சல்) அவர்களின் இறுதி காலத்தில் அவர்களோடு இருந்த தோழர்கள் அறிவித்தவைகளைக் கொண்டு "முவத்தா" என்ற நூலை தொகுத்தார். இத்தொகுப்பு இஸ்லாத்தின் மிக பழமையான ஒன்றாகும். இதில் இருந்தே இவர் மாலிக்கி மத்ஃகபை தொகுத்தார். இவ்வாறு தொகுத்த தமது சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

    "நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான், எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்."[5]

    இந்த மத்ஹப் கீழை எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை தவிர மற்ற அனைத்து ஆபிரிக்க நாடுகளில் உள்ள முஸ்லிம்களாலும் பின்பற்றப்படுகிறது.

    ஹம்பலி மத்ஹப்
    இச்சட்டத்தொகுப்பு "அஹம்மது இப்னு ஹம்பல்" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

    "என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்!"[6]இது அரேபிய தீபகற்பத்தில் உள்ள அநேக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.



    மேற்கண்டவாறு சுன்னி இஸ்லாம் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இவைகளுக்கிடையே வணக்க வழிபாட்டு முறைகளின் கிளை விடயங்களில் மட்டுமே மிக அரிதான வித்தியாசங்கள் உள்ளன.

    [தொகு] மக்கள்தொகை

    மக்கள்தொகையை பொறுத்தவரை சுன்னி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட பெரும்பான்மையாக உள்ளது. இது மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85% யை கொண்டுள்ளது. மேலும் ஈரான், இராக், லெபனான், கட்டார், பஹ்ரைன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர் வாழ் நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளது.

    [தொகு] மேற்கோள்கள்

    1. அல்இன்திகா பக்கம் 145;####ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 6 பக்கம் 293;#### ரஸ்முல் முப்தீ. பக்கம் 29, 32.
    2. ஈகாழுல் ஹிமம், பக்கம் 50.
    3. தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3, பக்கம் 15;///#### ஈகாழுல் ஹிமம் பக்கம் 100
    4. ஈகாழுல் ஹிமம் பக்கம் 68
    5. ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2, பக்கம் 42; /####உஸுலுல் அஹ்காம், பாகம் 6, பக்கம் 149;//####ஈகாழுல் ஹிமம் , பக்கம் 72.
    6. ஈகாழுல் ஹிமாம், பக்கம் 113.
    • Sunna - Definitions from Dictionary.com
    • Josef W. Meri, Medieval Islamic Civilization: An Encyclopedia, 1 edition, (Routledge: 2005), p.5
    • Hisham M. Ramadan, Understanding Islamic Law: From Classical to Contemporary, (AltaMira Press: 2006), p.26
    • Bülent Þenay. "Ash'ariyyah Theology, Ashariyyah". 'BELIEVE Religious Information Source'. Retrieved on 2006-04-01.
    • "Maturidiyyah". 'Philtar'. Retrieved on 2006-04-01.
    • Reported by ibn al-Jawzi in Manaaqib Imam Ahmad, pg. 155-156.


     

    [தொகு] வெளி இணைப்புகள்

    தாவூதி போரா

    உலகின் கோடீஸ்வர சமூகங்களில் ஒன்று தாவூதி போரா முஸ்லிம் சமூகம். வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் போரா முஸ்லிம்கள், கலாசாரத்தில் தனித்தன்மை பெற்றவர்கள். இது, நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற சமூகமும்கூட. 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள்.

    [தொகு] மக்கள்தொகை

    உலகம் முழுவதும் உள்ள 10 லட்சம் தாவூதி போரா முஸ்லிம்களில், சுமார் 9 லட்சம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் இரண்டாயிரம் குடும்பங்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இரண்டாயிரம் குடும்பங்களும் வசிக்கின்றன.

    [தொகு] மூலம்

    நான்கு நூற்றாண்டுகள் போரா முஸ்லிம்களின் பீடமாகவும், தாயகமாகவும் இருந்தது யேமன். அங்கிருந்துதான் 700 ஆண்டுகளுக்கு முன் போரா முஸ்லிம்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக, மும்பைக்கு வந்தனர். இவர்களது ஜமாஅத் பெயர் அஞ்சுமன்-னே-நஜ்மி. 25-வது மத குருவில் இருந்து இந்தியாவில் இம் மதப் பிரிவினரின் சரித்திரம் தொடங்குகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் போரா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கிருப்பவர்களும்கூட இந்தியாவில் இருந்து சென்றவர்கள்தான்.

    [தொகு] நிறுவனங்கள்

    போரா முஸ்லிம்களின் சர்வதேசத் தலைமையகம் மும்பையில் உள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாகவும் இதர மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். தாய் மொழி குஜராத்தி. அரபி, ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் உண்டு.
    சென்னையில் உயர் நீதிமன்றத்துக்கு எதிரே பிரம்மாண்டமாக அமைந்துள்ளது போரா முஸ்லிம்களின் மசூதி.
    கூடி வாழ்வது, இவர்களின் சிறப்பு. கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் சாலையில் "புர்ஹானி நகர்' என்ற தனிக் குடியிருப்பே உள்ளது. இவர்களது மசூதி "அல் குத்பி அல் மஸ்ஜித்' என அழைக்கப்படுகிறது.இவர்களது உலக மத குரு தை அல்- முத்லக் என அழைக்கப்படும் டாக்டர் சையத்னா முஹம்மது புர்ஹானுதீன் சாஹிப். 52-வது போரா மத குருவான இவருக்கு வயது 91. இவர் பிறந்தது சூரத்தில். ஆரம்பக் கல்வியைத் தந்தையும், 51-வது மத குருவுமான சையத்னா தாஹிர் சைபுதீன் சாஹிப்பிடம் கற்றார்.
    தந்தையின் நினைவாக இவர் உருவாக்கிய டாக்டர் சையத்னா தாஹிர் சைபுதீன் நினைவு அறக்கட்டளையால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
    70-களில் மும்பையில் புர்ஹானி வணிகவியல், கலைக் கல்லூரியை இவர் தோற்றுவித்தார். இன்று இவரது நிர்வாகத்தின் கீழ் உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    91-ல் சையத்னாவின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, விழிப்புணர்வை வளர்க்க புர்ஹானி பவுண்டேஷன் (இந்தியா) நிறுவப்பட்டது. 99-ல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றார் சையத்னா. "நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ, அந்தத் தேசத்துக்கு உண்மையாக இருங்கள்' என்பதே போரா முஸ்லிம்களுக்கு இவர் வலியுறுத்தும் நெறி.

    [தொகு] அழகிய கடன்

    "புர்ஹானி கரசன் ஹசன்னா' என்ற டிரஸ்ட் மூலமாக தாவூதி போரா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. கரசன் ஹசன்னா என்றால் வட்டியில்லாக் கடன் என்று பொருள். அதாவது, இறைவழியில் அழகிய கடன் என்று பொருள்.ஆயிரக்கணக்கான போரா முஸ்லிம்கள் தொழிலிலும் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்க இந்த வட்டியில்லாக் கடன் உதவுகிறது.இந்த டிரஸ்ட்டை ஒரு குழு நிர்வகிக்கிறது. மாதந்தோறும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக இதற்குச் செலுத்த வேண்டும்.
    மூன்று மாத சந்தா செலுத்திய பிறகு, செலுத்திய தொகையைப் போல மூன்று மடங்கு தொகை கடன் பெறலாம். கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் தகுதியை ஆராய்ந்து அதற்கேற்ப 10 முதல் 20 சம தவணைகள் என திருப்பிச் செலுத்தும் காலக் கெடு நிர்ணயிக்கப்படுகிறது. கடன் தவணையுடன் மாத சந்தாவையும் அவர் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும்.

    [தொகு] பெண்களுக்குச் சம உரிமை

    இப் பிரிவு முஸ்லிம்களில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் தொழும் அதே நேரத்தில் அதே மசூதியில், ஆனால் தனி இடத்தில் பெண்களும் தொழுகிறார்கள்.

    [தொகு] தனி வெண்ணிற உடை

    தொழுகைக்கு ஆண்கள் தூய வெள்ளையில் குர்தா, பைஜாமா, மேல் கோட் போன்ற சாயா ஆடையும், தொப்பியும் அணிந்து வர வேண்டும்.
    15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக "ரிதா' எனப்படும் புர்கா அணிய வேண்டும். ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட எல்லா இஸ்லாமியப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். மொஹர்ரம் இவர்களுக்கு சிறப்புக்குரிய பண்டிகை. ஆண்டுதோறும் மதகுரு சையத்னாவின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

    [தொகு] மும்பை செல்லும் ஜகாத்

    ஈட்டும் வருவாயில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குத் தர வேண்டிய வரி (ஜகாத்). இது வசூலிக்கப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தேவை அடிப்படையில் பல இடங்களுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.